செய்திகள்
கைது

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 மதுபாட்டில்கள் பறிமுதல் - பெண் கைது

Published On 2021-04-04 18:06 GMT   |   Update On 2021-04-04 18:06 GMT
வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பொம்மிடி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 55). இவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சாரதாவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் 400 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாந்தாவை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News