உள்ளூர் செய்திகள்
கொள்ளை வழக்கில் கைதான ஆந்திரா வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கொள்ளையன் அப்புவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சுப்பிரெண்டு வருண்குமார், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீசுக்கு பரிந்துரை செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருப்பந்தியூரில் நடந்த ஒரு கொள்ளை தொடர்பாக ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த அப்பு உள்பட 5 பேரை மப்பேடு போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் கொள்ளையன் அப்புவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சுப்பிரெண்டு வருண்குமார், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்ட ரின் உத்தரவுப்படி அப்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.