செய்திகள்
திண்டுக்கல் அருகே தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள குருவப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மயில்ராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்த மயில்ராஜ், குட்டியபட்டியில் உள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.