செய்திகள்
கோப்புபடம்

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி பெண்கள் போராட்டம்

Published On 2021-04-30 14:18 GMT   |   Update On 2021-04-30 14:18 GMT
தளவாய்புரம் அருகே 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தளவாய்புரம்:

தமிழக அரசு தற்போது கொரோனா காலம் என்பதால் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிய தடை விதித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று தளவாய்புரம் அருகேயுள்ள முகவூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சுமார் 50 பெண்கள் ஒன்று கூடி எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும், எங்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. 

இதனை அடுத்து பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News