உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

காங்கயம் - சேவூரில் ரூ.31 லட்சத்திற்கு கொப்பரை, நிலக்கடலை ஏலம்

Published On 2021-12-01 07:34 GMT   |   Update On 2021-12-01 07:34 GMT
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
காங்கயம்:

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.88 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது. காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 5 விவசாயிகள் 22 மூட்டை (1,123 கிலோ) கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 

காங்கயம் பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனர். இதில், ரூ.88 ஆயிரத்து 400க்கு கொப்பரை விற்பனையானது. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.103க்கும், குறைந்தபட்சமாக ரூ.70க்கும், சராசரியாக ரூ.101க்கும் விற்பனையானது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் செய்திருந்தார்.

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 940 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,150 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.6,900 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,550 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
Tags:    

Similar News