ஆன்மிகம்
துர்கா பூஜை நிறைவு: அம்மன் சிலை கடலில் கரைப்பு
மேளதாளம் முழங்க சாரம் அவ்வை திடலில் இருந்து அம்மன் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைத்திக்குப்பம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
புதுச்சேரி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சாரம் அவ்வை திடலில் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
விழாவின் இறுதி நாளில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சிவசங்கர் எம்.எல்.ஏ. மற்றும் புதுச்சேரி விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க சாரம் அவ்வை திடலில் இருந்து அம்மன் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைத்திக்குப்பம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
விழாவின் இறுதி நாளில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சிவசங்கர் எம்.எல்.ஏ. மற்றும் புதுச்சேரி விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க சாரம் அவ்வை திடலில் இருந்து அம்மன் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைத்திக்குப்பம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.