1500 குடும்பங்கள், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்- தளவாய்சுந்தரம் வழங்கினார்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கொரோனா பிரச்சினையால் முடங்கி கிடக்கும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க.வினர் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.
அகஸ்தீஸ்வரம் யூனியனுக்கு உட்பட்ட குலசேகரபுரம் பேரூராட்சியில் இன்று அ.தி.மு.க.வினர் நிவாரண உதவிகள் வழங்கினர்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இப்பகுதியில் வசிக்கும் 1500 குடும்பத்தினர் மற்றும் இங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ. அசோகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் அழகேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெசிம்.
குலசேகரபுரம் பேரூராட்சி தலைவர் சுடலையாண்டி, பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் சண்முகவடிவு, அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் நீல பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ், வடக்கு தாமரைகுளம் கிளை செயலாளர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.