செய்திகள்
விபத்து

காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2021-05-08 15:17 GMT   |   Update On 2021-05-08 15:17 GMT
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் விஷார் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பிச்சவாடியில் இருந்து விஷார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

முசரவாக்கம் என்ற இடத்தில் இவர் சென்றபோது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவியை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News