ராஜபாளையம் அருகே விபத்து: டாக்டர் பலி
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், மதுரை ரோட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் சந்திர ராஜா (வயது 50). பிசியோதெரபி டாக்டரான இவர் இன்று காலை 10.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
ராஜபாளையம் டி.பி.மில்ஸ் ரோடு, பழைய பஸ் நிலைய நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கீழே விழுந்த ஜெகதீஸ் சந்திரராஜா மீது லாரி டயர் ஏறி, இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றர்.