செய்திகள்
இந்திய வீரர் நிர்மல் சிங்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : இந்திய வீரர் பலி

Published On 2021-01-21 20:25 GMT   |   Update On 2021-01-21 20:25 GMT
பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டை ஒட்டி அமைந்துள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர்.

இருப்பினும், இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். அவர் பெயர் நிர்மல் சிங் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News