செய்திகள்
பள்ளிபாளையம் அருகே விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை
பள்ளிபாளையம் அருகே குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 38). மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட உதயகுமாருக்கு திலகவதி (33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.