செய்திகள்
தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்- ஆ.ராசா பேட்டி
தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார். #araja #dmkalliance
பெரம்பலூர்:
தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடைப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு.
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அரசியல் சாசன சட்டப்படி உருவாக்கப்பட்ட தன்னாட்சி சுதந்திர அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை உள்ளிட்டவற்றை தனது சுய லாபத்துக்காக எதிர்க்கட்சியினர் மீது ஏவி விடும் மோசமான அரசியல் தந்திரத்தை கையாள்கின்றனர்.
இந்த அமைப்புகளின் செயல்பாடு பாரபட்சமானதாக உள்ளது. இந்த அரசாங்கத்திடம் அராஜகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும், மோடி அரசுக்கும் எதிராக பேரலை வீசுகிறது. அதனால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளே அமோக வெற்றி பெறும் என்றார். #araja #dmkalliance