செய்திகள்
மின்தடை

திருப்பூரில் நாளை மின்தடை

Published On 2021-01-11 14:02 GMT   |   Update On 2021-01-11 14:02 GMT
திருப்பூரில் நாளை உயர் மின் அழுத்த கம்பம் மாற்றப்படுவதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருப்பூர்:

திருப்பூர் ராயபுரம் பிரிவு மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் உயர் மின் அழுத்த கம்பம் மாற்றப்படுவதால் இந்த பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராயபுரம் பரிவு அலுவலக பகுதிக்குட்பட்ட ராயபுரம், காதர்பேட்டை, சூசையபுரம், மிலிடரி காலனி, ஜெய்வாபாய் பள்ளி ரோடு, பெத்திசெட்டிபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News