செய்திகள்
100 கோடி தடுப்பூசி சாதனை நிகழ்வை ஈஷா அறக்கட்டளையில் கொண்டாடிய காட்சி.

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா அபார சாதனை படைத்துள்ளது - சத்குரு வாழ்த்து

Published On 2021-10-22 04:44 GMT   |   Update On 2021-10-22 04:44 GMT
100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா அபார சாதனை படைத்துள்ளதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஆயுதமாக நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நம் நாடு தடுப்பூசி போடுவதில் 100 கோடி என்ற பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர்  "100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா அபார சாதனை படைத்துள்ளது. தங்களது இடையறா முயற்சிகளால் இதனை நிகழச்செய்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்‌" என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News