செய்திகள்
கைது

ஊரடங்கை மீறிய 143 பேர் கைது- 132 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-06-16 10:08 GMT   |   Update On 2021-06-16 10:08 GMT
கோவையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தீவிரம் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை புறநகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வால்பாறை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக 67 பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 143 பேர் கைது செய்யப்பட்டனர்.

2, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 130 மோட்டார் சைக்கிள் உள்பட 132 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News