செய்திகள்
கோப்புபடம்

திருவண்ணாமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-20 11:25 GMT   |   Update On 2020-11-20 11:25 GMT
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பில் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை செயலாளர் நந்தன், மாவட்ட செயலாளர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கேங்மேனாக தேர்வு பெற்றுள்ள அனைவரையும் மின்வாரியத்தில் நியமனம் செய்திட வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News