ஆன்மிகம்
பாலக்கோட்டில் மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

பாலக்கோட்டில் மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

Published On 2021-10-28 06:31 GMT   |   Update On 2021-10-28 06:31 GMT
பாலக்கோடு மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை வெள்ளி கவசம், உற்சவர் சிலை ஊர்வலம் மற்றும் பூக்கள் அலங்காரம் ஆகியவை நடந்தது.
பாலக்கோட்டில் உள்ள மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடந்தது.

விழாவையொட்டி தினமும் மண்டல பூஜைநாள் நடந்தது. இதன் நிறைவு விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை வெள்ளி கவசம், உற்சவர் சிலை ஊர்வலம் மற்றும் பூக்கள் அலங்காரம் ஆகியவை நடந்தது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News