செய்திகள்
குன்னூர் நகராட்சியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

குன்னூர் நகராட்சியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-23 13:47 GMT   |   Update On 2021-01-23 13:47 GMT
குன்னூர் நகராட்சியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்:

குன்னூர் நகரின் முக்கிய பகுதியான மவுண்ட் ரோட்டில் நடைபாதையை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், அங்கு கடை வைக்க அனுமதி கொடுத்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குன்னூர் நகர பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் வி.பி. தெருவில் நடந்தது.

நகர தலைவர் குங்கும்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட மகளிர் அணி பொதுசெயலாளர் கலைவாணி, மாவட்ட துணைத் தலைவர் பாப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குடிநீர், நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும், வனவிலங்குகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரகுநந்தன், நகர பொதுசெயலாளர்கள் சரவணன், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News