செய்திகள்
ஐ.பி.எல். சீசனில் இதுவரை மூன்று சதங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தவான் சதம் அடித்ததன் மூலம் இந்த சீசனில் இதுவரை மூன்று சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
சி.எஸ்.கே. அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி தொடக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்தார். 20 ஓவர் போட்டியில் அவரது முதல் சதம் இதுவாகும்.
இந்த ஐ.பி.எல். சீசனில் அடிக்கப்பட்ட 3-வது செஞ்சுரி ஆகும். 34 ஆட்டத்தில் 3 சதங்களே அடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் அணியை சேர்ந்த கே.எல்.ராகுல் (132) மயங்க் அகர்வால் (106), டெல்லி அணியைச் சேர்ந்த ஷிகர் தவான் (101) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
கேஎல ராகுல் சதம் அடிக்கும்போது பஞ்சாப் ஆர்சிபிக்கு எதிராக வெற்றி பெற்றது. மயங்க் அகர்வால் சதம் அடிக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் தோல்வியை சந்தித்தது.