செய்திகள்
ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி
ஆற்காடு அருகே கிணற்றில் கால் தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த சின்னகுக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 62). இவர், அந்த பகுதியில் உள்ள தரைமட்ட கிணற்றில் கால் தவறி விழுந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி பத்மாவதியை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பத்மாவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.