ஆன்மிகம்
சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா ரத்து
சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். திருவிழா ரத்து செய்யப்பட்டாலும் ஆகம விதிப்படி கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்றும், பக்தர்கள் இன்றி திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் கோவில் வளாகத்தில் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக அலுவலர் கனகலட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். திருவிழா ரத்து செய்யப்பட்டாலும் ஆகம விதிப்படி கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்றும், பக்தர்கள் இன்றி திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் கோவில் வளாகத்தில் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக அலுவலர் கனகலட்சுமி தெரிவித்துள்ளார்.