உள்ளூர் செய்திகள்
கே.கே.நகரில் ஓட்டல் மாடியில் இருந்து விழுந்து சமையல்காரர் பலி
கே.கே.நகரில் ஓட்டல் மாடியில் இருந்து விழுந்து சமையல்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் (வயது47). சமையல் மாஸ்டரான இவர் சென்னை கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
கடந்த 31-ந்தேதி இரவு மதுபோதையில் இருந்த தன்ராஜ் ஓட்டலின் மொட்டை மாடி தடுப்பு சுவரின் மீது அமர்ந்து இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.