செய்திகள்
கொரோனா தினசரி பாதிப்பு: கேரளாவில் இன்று 15,567- ஆந்திராவில் 7,796
கேரளாவில் இன்று கொரோனாவிற்கு 124 பேர் உயிரிழக்க, ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று புதிதாக 15,567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் இன்று புதிதாக 7,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,641 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 77 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை ஆந்திர மாநிலத்தில் 1,07,588 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 17,71,007 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16,51,790 பேர் குணமடைந்துள்ளனர். 11,629 பேர் பலியாகியுள்ளனர்.