பல்லடத்தில் கார் மோதி விவசாய கூலிதொழிலாளி பலி
பல்லடம்:
பல்லடம் வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சின்னான் (வயது 70). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று வாவிபாளையத்துக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டார்.
பல்லடம்- உடுமலை சாலையில் நடந்து வந்தபோது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத கார் சின்னான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காமநாயக்கன் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னானை மீட்டு பல்லடம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும், அதன் டிரைவரையும் தேடி வருகிறார்கள்.