செய்திகள்
தஞ்சையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்
தஞ்சையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் தென்னமநாடு தெற்குதெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி தனகுமாரி (வயது 33). சம்பவத்தன்று இவர் தென்னமநாட்டில் இருந்து தஞ்சைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். தஞ்சை ரெயிலடியில் இறங்கிய தனகுமாரி தான் வைத்திருந்த ஹேண்ட்பைக்கை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த சிறிய பையையும் அதில் இருந்த 5 பவுன் தங்க நகையையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் பையை அபேஸ் செய்தது அவருக்கு தெரியவந்தது.
இது குறித்து தனகுமாரி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.