செய்திகள்
மாயம் (கோப்புப்படம்)

நாங்குநேரியில் கோவிலுக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2019-11-06 11:20 GMT   |   Update On 2019-11-06 11:20 GMT
நாங்குநேரியில் கோவிலுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள பத்மநேரி வடமலைசமுத்திரம் சங்கர்நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 45), விவசாயி. இவரது மகள் இசக்கியம்மாள் (19). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக களக்காட்டில் உள்ள தனியார் பிரட் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சங்கர் நாங்குநேரியில் உள்ள தனது மனைவி நாச்சியாரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் இசக்கியம்மாள் கடந்த 2-ந் தேதி மாலை நாங்குநேரியில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் உறவினர்கள் வீடு மற்றும் தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தார். எனினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து சங்கர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் வழக்குப்பதிவு செய்து இசக்கியம்மாள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News