செய்திகள்
காவலர் வீர வணக்க நாள்

பெரம்பலூரில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

Published On 2019-10-22 18:25 GMT   |   Update On 2019-10-22 18:25 GMT
பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
பெரம்பலூர்:

பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

அப்போது வளாகத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷா பார்த்திபன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கிரிதர், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரவீந்திரன் (பெரம்பலூர்), தேவராஜ் (மங்களமேடு), ரவி (ஆயுதப்படை), ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News