செய்திகள்
விபத்து

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்

Published On 2019-08-20 14:06 GMT   |   Update On 2019-08-20 14:06 GMT
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய குந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் சுனில் (வயது23). இவர், தனது பைக்கில் கஞ்சனூர் பகுதியை சேர்ந்த திம்மராஜ் மகன் சுரேஷ் (19), கிருஷ்ணப்பா மகன் லட்சுமணன்(26) ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் ஏற்றிக்கொண்டு ஓசூர் -கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகே எதிர் திசையில் தவறுதலாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த லோடு வேனில், சுனில் ஓட்டி வந்த பைக் மோதியது. 

இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுனில் மற்றும் லட்சுமணன் படுகாயமடைந்தனர்.  

இது குறித்து தகவலறிந்து வந்த குருபரபள்ளி போலீசார், சுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News