செய்திகள்
மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

திருவண்ணாமலையில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-17 06:42 GMT   |   Update On 2020-09-17 06:42 GMT
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க வட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர், அலுவலர்கள் மீது கொரோனா தொற்று நோய் காலத்தில் உயர்அதிகாரிகள் மிகப்பெரிய அச்சுறுத்தலையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி வருவதாக கூ அதனை கண்டித்தும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை பதவிகளை நிரப்பிட வேண்டும். ஊர்மாற்றம் உத்தரவால் வாரிய விதிகளை மீறக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இதில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News