செய்திகள்
விற்பனையாகாத செண்டுமல்லி பூக்கள் சாலையோரம் வீசப்பட்டிருப்பதை காணலாம்

பூக்களை சாலைகளில் கொட்டிச் செல்லும் ஓசூர் விவசாயிகள்

Published On 2021-04-30 10:13 GMT   |   Update On 2021-04-30 10:13 GMT
தோட்டங்களில் அறுவடை செய்த பூக்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வந்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடிவதில்லை என்று விவசாயிகள் கூறினர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெரிய அளவிலான பூ மார்க்கெட்டுகள் உள்ளன. ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமங்களிலிருந்து ரோஜா, சாமந்தி,மல்லி செண்டுமல்லி உள்ளிட்ட கொய்மலர்கள் நாள்தோறும் விற்பனைக்காக இந்த மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து தினமும் சுமார் 300 டன் அளவின பூக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்தநிலையில், அண்டை மாநிலங்களான கரநாடகம், ஆந்திரா கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு ஆகியவை நடைமுறையில் உள்ளதால் திருமண விழாக்கள், கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் சுபகாரியங்கள் மிகவும் குறைந்து விட்டது. மேலும் உள்ளூர் மற்றும் வெளிமாநில பூ வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டுகளுக்கு தற்போது வருவதில்லை. இதனால் தோட்டங்களில் அறுவடை செய்த பூக்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வந்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடிவதில்லை. இதனால் வேறுவழியின்றி பூக்களை சாலைகளில் கொட்டிச்செல்லும் அவல நிலை தொடர்கிறது என மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


Tags:    

Similar News