உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாபாக்கெட்டுகள் அடங்கிய பை.

ரெயிலில் கிடந்த பையில் 2 கிலோ கஞ்சா

Published On 2022-01-11 13:10 GMT   |   Update On 2022-01-11 13:10 GMT
சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கிடந்த பையில் 2 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
சேலம்:

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில்  மர்ம கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ரெயில்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

ஏற்கனவே சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கழிவறையில் கிடந்த பையில் கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில் தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் ஆழப்புழா சென்ற விரைவு ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து  போலீசார் காட்பாடியில் இருந்து சேலம் வரை சோதனை மேற்கொண்டபோது டி 2 பெட்டியில் புளு கலர் ஷோல்டர் பேக் கேட்பாரற்று இருந்ததை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். அதில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது. அந்தப் பையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News