செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மது விற்ற 4 பேர் கைது
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி போலீசார் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் ரைஸ்மில் அருகில் மது விற்ற லயன் கரையை் சேர்ந்த சதீஷ்(வயது21), காவிரி ஆற்றுப் பாலம் அருகில் மது விற்ற வானராங்குடியை சேர்ந்த துரைராஜ்(35), விஷ்ணம்பேட்டை பெரிய வாய்க்கால் அருகில் மதுவிற்ற ஓடமனைத்தெருவை சேர்ந்த சோமு(30), பூண்டி நாகாச்சி வளைவு அருகில் மதுவிற்ற அன்பழகன்(51) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.