செய்திகள்
விபத்து

காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- மருத்துவ கல்லூரி ஊழியர் பலி

Published On 2019-10-04 12:18 GMT   |   Update On 2019-10-04 12:18 GMT
காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மருத்துவ கல்லூரி ஊழியர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காரைக்கால்:

நாகை மாவட்டம் கீவலூரை அடுத்து உள்ள பெருங்கடமானூர் கிராமத்தை சேர்ந்தவர் மதிவாணன். (வயது 40). காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து கொண்டு இருந்தார். காரைக்கால் அருகே திருமலைராயபட்டினம் பைபாஸ் சாலை புதிய பாலம் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மதிவாணன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்தில் இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயம் அடைந்தார்.

இது குறித்து திருமலை ராயபட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது. 

விபத்தில் பலியான மதிவாணன் ஹெல்மெட் கொண்டு வந்திருந்தார். ஹெல்மெட்டை அணியாமல் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் தொங்கவிட்டு இருந்தார். ஹெல்மெட் அணிந்து இருந்தால் காயத்துடன் தப்பி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 
Tags:    

Similar News