உள்ளூர் செய்திகள்
கைது

ஆவடி அருகே கார் கண்ணாடி உடைப்பு- 2 பேர் கைது

Published On 2022-01-25 10:22 GMT   |   Update On 2022-01-25 10:22 GMT
ஆவடி அருகே கார் கண்ணாடி உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி:

ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ். கடந்த 21-ந் தேதி வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இவரது காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், கிருஷ்ணகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தினேஷ் காரில் சென்றபோது தெருவில் தேங்கி இருந்த மழைநீர் அவர்கள் மீது பட்ட தகராறில் கார் கண்ணாடி உடைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

Similar News