செய்திகள்
கோப்பு படம்

சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2019-09-30 11:39 GMT   |   Update On 2019-09-30 11:39 GMT
சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.
திருக்கனூர்:

காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று மாலை சந்தை புதுக்குப்பம் வாட்டர் டேங்க் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் இருந்து 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தார்கள். போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து போலீசார் மணலுடன் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணல் கடத்தி வந்தவர்கள் தமிழக பகுதியான வினாயகபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது20) மற்றும் நைனார்பாளையத்தை சேர்ந்த முருகன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News