செய்திகள்

நடத்தையில் சந்தேகம்- மனைவியை கத்தியால் குத்திய வியாபாரி

Published On 2019-03-28 17:13 GMT   |   Update On 2019-03-28 17:13 GMT
மேட்டுப்பாளையம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கத்தியால் குத்திய வியாபாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள எடுக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி ஜெனீபர் அகல்யா (வயது 26). கணவன்- மனைவி இருவரும் தென்னம் பாளையம் அவினாசி மார்க் கெட்டில் வாழைப்பழம் மற்றும் வாழை இலை வியாபாரம் செய்து வருகின்றனர்.

சின்னராஜூக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேம் ஏற்பட்டது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சின்னராஜ் தனது மனைவியை மேட்டுப்பாளையம் பாரதி நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு குடிபோதையில் வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ் அங்கு இருந்த கத்தியை எடுத்து ஜெனீபர் அகல்யாவின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கிழித்தார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜெனிபர் அகல்யாவை அங்கு இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News