வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம்

Published On 2022-01-29 05:56 GMT   |   Update On 2022-01-29 05:56 GMT
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வார இறுதி நாட்களில் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் அந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் ஆகமவிதிப்படி அனைத்து கால பூஜைகளும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வார இறுதி நாட்களில் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News