செய்திகள்
மழை

மழை எதிரொலி: கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2021-11-10 03:43 GMT   |   Update On 2021-11-10 03:43 GMT
தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை:

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இன்று அதிகாலை முதலே நகரின் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News