உண்மை எது
வெளியான புகைப்படம்

பைக் திருட்டு வழக்கில் 12 வருடத்திற்கு முன் கைது செய்யப்பட்ட பஞ்சாப் முதல்வர்?- வைரலாகும் புகைப்படம்

Published On 2022-04-02 12:26 GMT   |   Update On 2022-04-02 12:26 GMT
புகைப்படத்தில் பகவாந்த் மான் உள்ளிட்ட மூன்று பேர் தரையில் அமர்ந்துள்ளனர். 12 வருடத்திற்கு முன் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.

அக்கட்சியை சேர்ந்த பகவாந்த் மான் பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இளைஞராக இருந்தபோது பைக் திருட்டு வழக்கு ஒன்றில் பகவாந்த் மான் கைது செய்யப்பட்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் பகவாந்த் மான் உள்ளிட்ட மூன்று பேர் தரையில் அமர்ந்துள்ளனர். 12 வருடத்திற்கு முன் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என தெரியவந்துள்ளது. கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் பரிசோதனை செய்ததில் இந்த புகைப்படத்தை பஞ்சாப் பாடகர் காராம்ஜித் அன்மோல் என்பவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் 15 வருடத்திற்கு முன் பகவாந்த் மானுடன் ஹோலி கொண்டாட்டத்தின்போது எடுத்த நினைவு என்றும் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தரவிறக்கம் செய்த சிலர், இது கைது செய்யப்பட்டபோது எடுத்ததாக போலி தகவல்களை பரப்பி வருகின்றனர்.
Tags:    

Similar News