உள்ளூர் செய்திகள்
திருவிளக்கு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

1,008 திருவிளக்கு பூஜை நடந்தது

Published On 2022-04-15 09:20 GMT   |   Update On 2022-04-15 09:20 GMT
வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
எடப்பாடி:

எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள ஓம்சக்தி காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டியும், பொதுமக்கள் ஒற்றுமையுடன் வாழவும், மழை வேண்டியும் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.

இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

 இதேபோல வெள்ளாண்டி வலசு பழையபேட்டை சக்தி விநாயகர் கோவில், வெல்லக்கரடு பெருமாள் கோவில், முகரை நரசிம்ம பெருமாள் கோவில், வெள்ளூற்று பெருமாள் கோவில், கள்ளப்பாளையம் முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியை செய்தனர்.

Tags:    

Similar News