உள்ளூர் செய்திகள்
ஒப்பந்த டாக்டர்களுக்கு சம்பள உயர்வு ஆணையை ரங்கசாமி வழங்கினார்

ஒப்பந்த டாக்டர்களுக்கு சம்பள உயர்வு ஆணை: ரங்கசாமி வழங்கினார்

Published On 2022-01-13 09:15 GMT   |   Update On 2022-01-13 09:15 GMT
ஒப்பந்த டாக்டர்களுக்கு சம்பள உயர்வு ஆணையை முதல்&அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி:

புதுவை அரசு கால்நடைத்  துறையில் பணிபுரியும் ஒப்பந்த மருத்துவர்களுக்கான மாத சம்பளம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சட்ட சபையில் அறிவித்திருந்தார்.

இதன்படி உயர்த்தப்பட்ட சம்பளத்துக்கான ஆணையை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில்  கால்நடை ஒப்பந்த மருத்துவர்களிடம் வழங்கினார். 
Tags:    

Similar News