ஆன்மிகம்
வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
தா.பேட்டை பிள்ளாதுறையில் அமைந்துள்ள ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
தா.பேட்டை பிள்ளாதுறையில் அமைந்துள்ள ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. விழாவை முன்னிட்டு புனிதநீர் கொண்டுவருதல், அனுக்ஞை, சங்கல்பம் புண்ணியாகவாசனம், வாஸ்துபூஜை, வாஸ்து ஹோமம், பூமிபூஜை பூர்ணாகுதி, கும்பபூஜைகள் நடந்தது.
அதனைத்தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமி, கருடன், துவார பாலகர், ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜதிலகம் மற்றும் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமி, கருடன், துவார பாலகர், ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜதிலகம் மற்றும் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.