ஆன்மிகம்
கற்பக விருட்ச வாகனத்தில் சோமஸ்கந்தர் அருள்பாலிப்பு: இன்று மகாசிவராத்திரி உற்சவம்
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) மகாசிவராத்திரி உற்சவம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சோமஸ்கந்தர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து இரவு குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரசாமி, காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) மகாசிவராத்திரி உற்சவம் நடக்கிறது. அதையொட்டி அதிகாலை 4 மணியளவில் லிங்கோத்பவ தரிசனம் நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை ஏகாந்தமாக தேரோட்டமும் (போகி தேர்), காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை நந்தி வாகன சேவையும் நடக்கிறது.
மகா சிவராத்திரி உற்சவத்தையொட்டி கோவிலில் அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2 மணிவரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) மகாசிவராத்திரி உற்சவம் நடக்கிறது. அதையொட்டி அதிகாலை 4 மணியளவில் லிங்கோத்பவ தரிசனம் நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை ஏகாந்தமாக தேரோட்டமும் (போகி தேர்), காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை நந்தி வாகன சேவையும் நடக்கிறது.
மகா சிவராத்திரி உற்சவத்தையொட்டி கோவிலில் அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2 மணிவரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.