உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

Published On 2022-01-28 05:22 GMT   |   Update On 2022-01-28 05:22 GMT
குடும்ப தகராறில் பெண் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் இவரது மனைவி சந்திரா (வயது 45) இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு செல்லப் பாண்டியனுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார் சந்திரா. அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சந்திரா, அரளி விதையை அரைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த உறவினர்கள் உடனடியாக சந்திராவை அழைத்துக்கொண்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வந்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த சந்திராவின் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News