ஆன்மிகம்
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி கும்ப பூஜை, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலைக்கோவிலில் இருந்து சுவாமி பண்பொழிக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் இரவில் வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க தெப்பத்தில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து 11 முறை சுவாமி தெப்பத்தை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி கும்ப பூஜை, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலைக்கோவிலில் இருந்து சுவாமி பண்பொழிக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் இரவில் வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க தெப்பத்தில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து 11 முறை சுவாமி தெப்பத்தை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.