செய்திகள்

வெங்கல் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2019-05-15 06:54 GMT   |   Update On 2019-05-15 06:54 GMT
வெங்கல் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள ஏரியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளுவதாக வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலுக்கு தகவல் கிடைத்தது.

அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது வாகன பதிவு எண் இல்லாத டிராக்டரில் மணல் கடத்தி வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் மேலகொண்டயார் கிராமம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணிக்கம், டிராக்டர் உரிமையாளர் கார்லப் பாக்கம் கிராமம் வள்ளலார் தெருவைச் சேர்ந்த துரை என்பது தெரியவந்தது.

அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News