செய்திகள்
பவானியில் விபத்து - பஸ் மீது இரு சக்கர வாகனம் மோதி வாலிபர் பலி
பவானி அருகே சுற்றுலா பஸ் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியானார்.
பவானி:
பவானி அருகே உள்ள கல்பாவி தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 21).
இவர் பவானி மேட்டூர் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போதுபவானி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் ஒரு சுற்றுலா பஸ் சென்றது.
முன்னாள் சென்ற அந்த பஸ்சின் பின் பகுதியில் அஜித்குமார் சென்ற இரு சக்கர வாகனம் எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த அவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஜித்குமார் உடலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி அருகே உள்ள கல்பாவி தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 21).
இவர் பவானி மேட்டூர் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போதுபவானி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் ஒரு சுற்றுலா பஸ் சென்றது.
முன்னாள் சென்ற அந்த பஸ்சின் பின் பகுதியில் அஜித்குமார் சென்ற இரு சக்கர வாகனம் எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த அவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஜித்குமார் உடலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.