ஆன்மிகம்
குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை

Published On 2021-08-11 08:06 GMT   |   Update On 2021-08-11 08:06 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூர திருவிழாவுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமிகோவில் மற்றும் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆகிய இரு கோவில்களிலும் இன்று (புதன்கிழமை) ஆடிப்பூர விழாவையொட்டி வழக்கமான சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆனால் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதைப்போல குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும் இன்று ஆடிப்பூர திருவிழாவுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News