ஆன்மிகம்
பச்சையம்மன்

காட்டுசித்தாமூர் பச்சையம்மன் கோவில் விழா

Published On 2021-02-17 07:09 GMT   |   Update On 2021-02-17 07:09 GMT
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள காட்டு சித்தாமூர் பச்சையம்மன் கோவிலில் 32-ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள காட்டு சித்தாமூர் பச்சையம்மன் கோவிலில் 32-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல் வகை வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனையும், மலர் மாலைகள் அணிவித்து வழிபாடும் நடந்தது.

கோவிலில் அம்பாள் நட்சத்திர ஹோமம், சண்டி ஹோமம், லட்சார்ச்சனை, சோட சோபாசார தீபாராதனையும் நடந்தது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News