செய்திகள்
தற்கொலை

நெய்வேலி அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-17 08:25 GMT   |   Update On 2020-10-17 08:25 GMT
நெய்வேலி அருகே கடன்தொல்லையால் அவதிப்பட்டு வந்த மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள மேல் வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகன் வெங்கடேசன் (வயது 36). மெக்கானிக்கான இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடன் வாங்கிவிட்டு, அதனை திருப்பி தரவில்லை என்று தெரிகிறது. 

இந்த நிலையில் அந்த பெண், வெங்கடேசனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் வீட்டின் முன்புறமுள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அவரது மனைவி விமலாதேவி கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News